17th May 2022 19:00:10 Hours
மே 12 முதல் 15 வரை பாரிஸில் நடைபெற்ற 'LES Centuries International Boxing Tournament Paris - 2022' குத்துச்சண்டை போட்டியில் (57 எடைப்பிரிவு) 24 வது விஜயபாகு காலாட்படை படையணியின் இராணுவ குத்துச்சண்டை வீரரான லான்ஸ் கோப்ரல் பிஏஆர் பிரசன்ன அவர்கள் நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமையையும் பாராட்டையும் பெறும் வகையில் முதலிடத்தை வென்றார்.
இலங்கை தேசிய அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற ஒரே குத்துச்சண்டை வீரர் இவர்தான். இவர் இராணுவ குத்துச்சண்டை சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் மற்றும் அவர் வரவிருக்கும் 2022 பொதுநலவாய நாடுகளுக்கான விளையாட்டு நிகழ்வில் பங்கேற்கும் முன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற ஒரே குத்துச்சண்டை வீரர் ஆவார்.
வரவிருக்கும் பொதுநலவாய விளையாட்டு 2022 இல் போட்டியிட தகுதி பெற்ற ஐந்து குத்துச்சண்டை வீரர்களையும் மேம்படுத்திய ஒரே அமைப்பாக இலங்கை இராணுவம் திகழ்கிறது.