17th May 2022 18:56:26 Hours
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட் படையினர் வெசாக் தினத்தை முன்னிட்டு (15) கம்புருப்பிட்டி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 600 இற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகளை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.
சிப்பாய்களின் சொந்த செலவைப் பயன்படுத்தி சமைத்த உணவுப் பொதிகளை இராணுவத் சிப்பாய்கள் பயனாளிகளின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் சென்று பின்னர் விநியோகித்தனர்.
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025' அமைவாக கைகோர்த்துச் செல்லும் சமூகத் திட்டத்தினை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆசிர்வாதத்துடன் 61 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீ்ழ் 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்களின் பங்குபற்றுதலுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பயனாளிகள் அவர்களின் வாழ்க்கைச் சூழல் மற்றும் பொருளாதாரத் காரணிகளால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.