16th May 2022 18:05:54 Hours
21வது படைப்பிரிவின் 35 வது தளபதியாக விஷேட படையணியின் பிரிகேடியர் நிஸ்ஸங்க எரியகம அவர்கள் சனிக்கிழமை (7) அனுராதபுரத்தில் உள்ள 21வது படைத் தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 21 வது படைப்பிரிவின் தளபதிக்கு 7 வது இலங்கை கவச வாகனப் படையணிப் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கியதுடன் பதவிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.அதன்பின், புதிய தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராணயகளுக்கு மத்தியில், தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், புதிய தளபதி 21 வது படைப்பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றியதுடன் வரவிருக்கும் நாட்களில் தனது செயல் திட்டத்தினை முன்வைத்தார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 21 வது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
இப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க 61 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.