16th May 2022 18:08:55 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது படைப்பிரிவினர் நன்கொடையாளரின் அனுசரணையுடன் மன்னாரில் உள்ள பார்வை குறைப்பாடுடைய 253 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகளை சனிக்கிழமை (7) மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் கண் சிகிச்சைப் பிரிவின் ஒருங்கிணைப்பில் வழங்கி வைத்தனர்.
மன்னார் பிரதேச சுகாதார சேவைகள் அலுவலகத்தின் ஆதரவுடன், கொழும்பு 306/B-2 லயன்ஸ் கழகத்தினை சேர்ந்த திரு சசங்க மென்டிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் திரு ரவி ராஜபக்ஷவினால் இந்த திட்டத்திற்கான நிதி பங்களிப்பு வழங்கப்பட்டது.
54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர மற்றும் 543 வது பிரிகேட் தளபதி கேணல் துஷார ஹரஸ்கம இந் நிகழ்வினை மேற்பார்வை செய்ததுடன் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக படைப்பிரிவு தளபதி கலந்து கொண்டார்.
543 வது பிரிகேட் தளபதி, 4 வது விஜயபாகு காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.ஜி.எஸ்.கால்லகே, , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், லயன்ஸ் கழகத்தின் திரு சசங்க மெண்டிஸ், மன்னார் பொது சுகாதார பணிப்பகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரவி பச்சை, வைத்தியர் எஸ் நிஷாந்தி கேதீஸ்வரன் மற்றும் படையினர் இத்திட்டத்தை நடாத்துவதற்கு ஆதரவளித்தனர்.