Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2022 18:03:38 Hours

மன்னார் படையினரால் வைத்தியசாலை நோயாளிகளுக்கு இரத்த தானம்

வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 54 வது படைப்பிரிவின் 541 வது பிரிகேட் படையினரால் செவ்வாய்க்கிழமை (10) மன்னார் மாதோட்டை ரஜமஹா விகாரையில் இரத்த தான முகாம் நடாத்தப்பட்டது.

54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களின் வழிக்காட்டலில் 541 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்களின் மேற்பார்வையில் 541 வது பிரிகேட்டின் 63 இராணுவத்தினர் இரத்ததானம் செய்தனர்.

54 வது படைப்பிரிவு, 541 வது பிரிகேட், 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி மற்றும் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணிகளின் படையினர் இந்த இரத்த தான நிகழ்வில் இரத்தம் வழங்கினர்.

541 வது பிரிகேட் தளபதி, 54 வது படைபிரிவு சிவில் விவகார அதிகாரி, 12 வது இலங்கை பிரங்கி படையணி மற்றும் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள்,படையினர் மருத்துவ அதிகாரிகள் மற்றும் தாதியர் இச் சமூக திட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலய குருவின் ஆதரவு இத்திட்டத்திற்கு முமையாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.