30th April 2022 04:08:45 Hours
இலங்கை பீரங்கிப் படையணியின் 134 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கிப் படையணி தலைமையகத்தில் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இராணுவப் பீராங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன், நிகழ்வின் ஆரம்ப அம்சமாக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படதுடன், வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
மேலும் பிரங்கி படையணியின் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரவு முழுவதுமான பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19 )பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டதுடன், மறுதினம் (20) அவர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆண்டு பூர்த்தி தினமான (20) இடம்பெற்ற நிகழ்வுகளின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இலங்கை இராணுவ பீராங்கி படையணியின் படைத் தளபதியவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டுவதற்கு முன்னதாக நிலையத் தளபதியினால் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.