Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2022 19:43:09 Hours

இராணுவத்தினரின் உதவியுடன் பாலிநகர் பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கல்

நன்கொடையளரின் உதவியை கொண்டு வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65வது படைப்பிரிவினரின் ஒருங்கிணைப்பில் வவுனியா பாலிநகர் வித்தியாலயத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வின் போது வறிய மாணவர்களுக்கு 500 பாடப்புத்தக பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் சமூக ரீதியான பின்னடைவுகளை கருத்தில் கொண்டு படையினரின் வேண்டுகோளுக்கிணங்க பத்தரமுல்லைச் சேர்ந்த திரு சுரேன் டி சில்வா மற்றும் கலாநிதி சி.எஸ்.சிவகுமார் மற்றும் திரு.ஆர்.பி.ஜி.டபிள்யூ. விக்கிரமசிங்க ஆகியோரால் வழங்கப்பட்ட நிதி உதவிகளை கொண்டு 500 வறிய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி உதவியும் வழங்கப்பட்டன.

65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர அவர்களின் மேற்பார்வையின் கீழ் 652 வது பிரகேடின் கீழுள்ள 10 வது இலங்கை இலேசாயுதக காலட்படையணியினரால் பாலிநகர் வித்தியாலயத்தில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.