20th April 2022 19:55:26 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் 'இதயம் உள்ள இராணுவம்’ தொனிப்பொருளுக்கமைய படையினர் 'இராணுவ முன்னோக்கு வியூகம் 2020 - 2025' திட்டத்திற்குகமைய சனிக்கிழமை (9) மதவாச்சி, கட்டுவளை பகுதியில் வசிக்கும் மற்றொரு குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டியது.
இரண்டு மகள்களுடன் வசித்து வந்த விதவை தயான திருமதி இந்திராணி சோமலதாவின் வறுமை வாழ்க்கை நிலைமை குறித்து 211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து 2 வது (தொ) விஜயபாகு காலாட்படைப் படையணியினர் இந்த வீட்டை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதுடன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு பொது வைத்தியசாலையில் வைத்தியர் ரஞ்சனி செனவிரத்னவினால் திட்டத்திற்கான அனுசரணை வழங்கப்பட்டது.
இந் அடிக்கல் நாட்டு நிகழ்வில் 211 வது பிரிகேட் சிவில் அதிகாரி 2 வது (தொ) விஜயபாகு காலாட்படையணியின் கட்டளை அதிகாரி, மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.