15th April 2022 18:30:25 Hours
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் கே.ஏ.எம்.ஜி குலரத்ன (ஓய்வு) அவர்கள் தனது 77 வது வயதில் சுகயீனம் காரணமாக வத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (14) காலமானார்.
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் 1 வது தளபதியாக இருந்த இவர், வைது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி, நலன்புரி பணிப்பாளர், ஒழுக்காற்று அதிகாரி, உத்தியோகபூர்வ வழங்கள் தளபதி, 33 வது பிரிகேட் தளபதி, 32 வது பிரிகேட் தளபதி மற்றும் இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
அவரது பூதவுடல் தற்போது பொரளையில் உள்ள ஜயரத்ன மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் பூரண இராணுவ மரியாதையுடன் நடைபெறும்.