13th April 2022 16:53:41 Hours
இந்தியாவின் ஹைதராபாத், சிகுந்த்ராபாத்தில் உள்ள பாதுகாப்பு முகாமைத்துவ கல்லூரியில் உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி - 17 இனை தொடர்ந்த இராணுவத்தின் இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் சம்பவ கற்ககை தொகுப்பானது, 162 பங்கேற்பாளர்களில் சிறந்த 10 பரிந்துரைக்கப்பட்ட சம்பவ கற்ககை தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு வலிமை, பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் பகுப்பாய்வின் கீழ் 24 மணி நேரத்திற்குள் செயல்படாத தனிமைப்படுத்தல் மையத்தை நிர்மாணிப்பதற்கான ஒரு கலப்பு முறை சம்பவ கற்ககை " என்ற தலைப்பிற்கான 'Commandant's Book Prize' விருது வழங்கப்பட்டது.
2021 மே 31 முதல் 2022 மார்ச் 28 வரை இந்தியாவின் ஹைதராபாத் சிகுந்த்ராபாத்தில் உள்ள பாதுகாப்பு முகாமைத்துவ கல்லூரியில் உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி- 17 ஐப் தொடர்ந்த பிரிகேடியர் எல்.சி.கே. பத்திரன, ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைநெறியில் முதுகலைப் பட்டமும், அகில இந்திய சங்கத்தில் முகாமைத்துவத்தில் உயர் பாடநெறி பட்டத்தையும் பெற்றார். 162 பாடநெறியைப் தொடர்ந்த மற்றும் பங்கேற்பாளர்களில் பத்து சிறந்த நபர்களில் இவரும் ஒருவர்.
திட்டமிடல் தொடர்பாக ஒரு நபர் அல்லது நிறுவனத்தை பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அடையாளம் காண உதவும் ஒரு மூலோபாய திட்டமிடல் மற்றும் மூலோபாய தலைமைத்துவ நுட்பமான வலிமை, பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் பகுப்பாய்வின் கீழ் கொவிட் 19 பாதிக்கப்பட்டவர்களுக்காக 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை இலங்கை இராணுவம் நிர்மாணிப்பது தொடர்பாக அவரது சம்பவ கற்கை காணப்பட்டது.
இது சில நேரங்களில் சூழ்நிலை மதிப்பீடு அல்லது சூழ்நிலை பகுப்பாய்வு என்று அழைக்கப்படுகிறதுடன் சில மணிநேரங்களுக்குள் ஒரு தேசத்திற்கு அவசரகால ஏற்பாடுகள் எவ்வாறு வழங்கப்பட்டன என்பதை சுருக்கமாகக் கூறுகிறது.
குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு Commandant's Book Prize வழங்கப்பட்டதுடன் பாடநெறியின் போது கிடைக்கப்பெற்ற இந்த அரிய அங்கீகாரமானது நாட்டிற்கும் அமைப்புக்கும் பெருமையினை சேர்த்தது.