23rd March 2022 06:10:35 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் வழிகாட்டலுக்கமை ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (17) பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக சன்னதியில் புத்தர் சிலையை வைப்புச் செய்து நிகழ்த்தப்ப்ட போதி பூஜா வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்ததோடு, மறுதினம் இடம்பெற்ற அன்னதானத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.
ஆண்டு நிறைவு தினமான (18) தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களுக்கு 20 வது கஜபா படையணியின் சிப்பாய்களினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து படைப்பிரிவு தலைமைகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதியவர்கள் படையினருக்கான உரையொன்றை நிகழ்த்தியிருந்ததோடு, அந்த உரையின் ஆண்டு விழா நிகழ்வுகளின் முக்கியத்தும் மற்றும் தேசத்தின் நலனுக்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதனையடுத்து அனைத்து நிலையனருக்குமான மதிய விருந்துபசாரத்திலும் தளபதியவர்கள் கலந்துகொண்டார்.
அதனையடுத்து வன்னி தலைமையகத்துடன் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அநுராதபுரத்திலுள்ள அபிமன்சல 1 இற்கு பரிசுப் பொருட்களுடன் சென்றிருந்ததோடு அங்கிருந்து காயமடைந்த போர் வீரர்களுடன் சுமூகமாக கலந்துரையாடி அவர்களுக்கு பரில்களையும் சிற்றூண்டிகளையும் வழங்கி வைத்தனர்.