21st March 2022 20:23:35 Hours
பசுமை விவசாய உற்பத்திகளின் ஒருங்கிணைப்பு மற்றும் அவற்றின் விநியோகம் தொடர்பான மேலும் ஒரு கலந்துரையாடல் பதுளை மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தின் அழைப்பின் பேரில் 112 வது பிரிகேட் தளபதி கலந்துகொண்ட கலந்துரையாடலில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் முக்கியத்துவம், சேதன பசளை இருப்புகளை விநியோகம் செய்தல் மற்றும் அதிகளவான பயிற்சி திட்டங்களை நடத்துவது ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் கௌரவ தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன தெனிபிட்டிய, மாவட்டச் செயலாளர் திருமதி தமயந்தி பரணகம மற்றும் ‘லக் பொஹொர’வைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.