19th March 2022 20:38:55 Hours
கிளிநொச்சியிலுள்ள முதலாம் படை தலைமையகத்தின் 2 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கிறிஷாந்த ஞானரத்ன அவர்கள் திங்கட்கிழமை (14) இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
தளபதியவர்களின் வருகையுடன் ஆரம்பமான நிகழ்வின் போது கொமாண்டோ படையணியினரால் தலைமையக வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து முதலாம் படையணியின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஜேபீசீ பீரிஸ் அவர்களினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டதோடு, 5 வது கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களினால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
பின்னர் மேஜர் ஜெனரல் கிறிஷாந்த ஞானரத்ன அவர்கள் மகா சங்கத்தினரின் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அதனை தொடர்ந்து முதலாம் படையின் கீழுள்ள பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தளபதியவர்களுக்கு தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி வைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இறுதி அம்சமாக “நெலும் பியச” பல்செயல்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வருகை தந்த தளபதியவர்கள் படையினருக்கான உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.