19th March 2022 20:28:54 Hours
யாழ்ப்பாணத்தில் உள்ள 10 பாடசாலைகளைச் சேர்ந்த 62 மாணவர்களுக்காக தலைமைப் பயிற்சியாளர் திரு சஞ்சுல ரவிநாத் தலைமையில் இலங்கை இராணுவ சதுரங்கக் குழுவின் தகுதி வாய்ந்த பயிற்றுவிப்பாளர் குழுவினால் ஞாயிற்றுக்கிழமை (13) நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் அறிவுரைக்கமைய 51 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 511 மற்றும் 513 பிரிகேட்களின் தளபதிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வானது மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட அவர்களின் அனுசரணையுடன் 2022 ஆம் ஆண்டு மார்ச் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கோப்பாயில் உள்ள சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பூங்காவில் நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில், கற்றல், ஆய்வு, அடிப்படை விதிகள், சதுரங்கக் குறியீடு, செக் மேட் பேட்டர்ன்கள் மற்றும் சதுரங்க கடிகாரத்தை பயன்படுத்தும் முறைமைகள் தொடர்பிலான பயிற்சிகளை பெற்றுகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அவசியமான கற்றல் உபகரணங்கள் மதிய உணவு மற்றும் சிற்றூண்டிகளும் வழங்கப்பட்டன.