19th March 2022 20:34:57 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன அவர்கள் திங்கட்கிழமை (14) 14 வது படைப்பிரிவு தலைமைகத்தின் 13 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
14 வது படைப்பிரிவு தளபதியாக புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட தளபதி வருகை தந்த போது படைப்பிரிவு தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகளினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அதனையடுத்து புதிதிதாக நியமனம் பெற்ற தளபதியவர்களுக்கு படைப்பிரிவின் கீழுள்ள பிரிகேட் தளபதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தியிருந்தினார்.
நிகழ்வில் 141,142,143 பிரிகேட் தளபதிகள், 14 வது படைப்பிரிவு தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
மேற்படி புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னதாக மேற்படி அதிகாரி 52 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் வகித்தார்.