19th March 2022 07:08:40 Hours
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52 வது படைப்பிரிவின் 28 வது தளபதியாக இயந்திரவியற் காலாட்படையின் பிரிகேடியர் உதய ஹேரத் திங்கட்கிழமை (14) பதவியேற்றார்.
52 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக நியமனம் பெற்றுகொண்டுள்ள அதிகாரிக்கு 15 வது (தொ) கஜபா படையணியின் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, பணிநிலை அதிகாரிகளும் அணிவகுத்து மரியாதை வழங்கினர். இதன்போது பதவியேற்புக்கான ஆவணங்களில் கையொப்பமிட்ட பிரிகேடியர் உதய ஹேரத் அவர்கள் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைமையக வளாகத்தில் மா கன்று ஒன்றை நாட்டி வைத்த பிரிகேடியர் உதய ஹேரத் அவர்கள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையொன்றை நிகழ்த்தினார். நிகழ்வின் நிறைவம்சமாக தேநீர் விருந்துபசாமொன்றும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள் 52 வது படைபபிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் உதய ஹேரத் இந்த நியமனத்திற்கு முன்னர் இராணுவ பயிற்சி கட்டளையின் பாடத்திட்டம் மற்றும் கண்காணிப்பு பணிப்பாளராக கடமையாற்றினார்.