05th March 2022 10:54:58 Hours
வெள்ளிக்கிழமை (4) ஹெவ்லொக் பார்க்கில் நடைபெற்ற ' இலங்கை ரக்பி கழகங்களுகிடையிலான ரக்பி போட்டி - 2022' இல் போட்டியிடும் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் கடற்படை அணியினை 18 புள்ளிகளால் தோற்கடித்து, அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இராணுவம் மற்றும் கடற்படை கழகங்களுக்கிடையிலான ரக்பி போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் திறமைகளை வெளிப்படுத்திய போதிலும் இராணுவ படையினர் கடற்படையினரைத் தடுத்து இரண்டு முயற்சிகளுடன் வெற்றியை பதிவு செய்தனர்.
முதல் பாதியின் பின்னர் இராணுவத்தின் சிப்பாய் மதுஷான் ஹெட்டியாராச்சி இரண்டு தண்டனைகளை நேர்த்தியாக இலக்கிக்கு அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார். அதன்பின்னர், இராணுவ வீரர்கள் தங்களின் இரண்டு முயற்சி கோல்களை போட்டனர்.