28th February 2022 19:36:10 Hours
பூகொட போதிராஜாராம பாடசாலை வளாகத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்ற திறந்த கயிறு இழுத்தல் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ 'ஏ' மற்றும் 'பி' அணிகளும், இலங்கை இராணுவ மகளிர் அணிகளும் நாடளாவிய ரீதியில் கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சிவில் குழுக்கள் உட்பட 26 அணிகளை வீழ்த்தி முதலாம் இடங்களையும் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
பூகொட டபுள் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டியின் பல சுற்றுகளில் திறன்களை வெளிப்படுத்தி இராணுவத்தின் A மற்றும் B அணிகளிலுள்ள வீரர்களுக்கு முதலாம் இடத்தையும் 3 ஆம் இடத்தையும் பெற்றுக்கொடுத்தது. அவர்கள் 640 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு போட்டி அணிகளை வீழ்த்தி சிறந்து விளங்கினர்.
இதேவேளை, இதே போட்டியில் 560 கிலோ எடைப் பிரிவின் கீழ் இலங்கை இராணுவ மகளிர் அணிகள் முதலாம் மற்றும் இணை்டாம் இடங்களை சுவீகரித்துக் கொண்டனர்.