Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2022 10:54:54 Hours

இராணுவ கராத்தே அணி கராத்தே பிரீமியர் லீக் - 2022 சாம்பியன்ஷிப்னை வென்றது

சனிக்கிழமை (26) பண்டாரகம மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கராத்தே பிரீமியர் லீக் - 2022 கிண்ணத்தை இலங்கை இராணுவ கராத்தே அணி கைப்பற்றியது. இலங்கை கராத்தே டோ சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கராத்தே அணிகளுக்கிடையிலான முதன்முறையாக நடத்தப்பட்ட கராத்தே போட்டி இதுவாகும்.

இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் அணிகள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 16 கராத்தே அணிகள் இந்த போட்டியில் போட்டியிட்டன. இறுதியாக, இலங்கை இராணுவ அணி கராத்தே பிரீமியர் லீக் – 2022 சாம்பியன்ஷிப் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

முதலாவது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் சார்ஜென் ஆர்எம்டிஎல் வீரசிங்க, 3 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கோப்ரல் கே.டி.பண்டாரிகொடகே, முதலாவது இலங்கை பொறியியலாளர் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஆர்.எஸ் பொன்சேகா, முதலாவது இலங்கை பொறியியலாளர் படையணியின் எப்.எச்.கே.எல். சில்வா மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணியின் சிப்பாய் டப்ளியூஎஸ்வீ டயஸ் ஆகியோர் இராணுவ அணியை பிரதிநிதித்துவபடுத்தினர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் விளையாட்டு வீரர்களின் தேவைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.