26th February 2022 16:00:26 Hours
இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் சார்ஜன்ட் ஜே.ஏ.சி.லக்மால் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கோப்ரல் வை.டி.ஐ.குமார ஆகியோர் சிங்கப்பூர் 2022 சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே 67 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் 55 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இப்போட்டியானது இங்கிலாந்து பர்மிங்காமில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதிகளையும் பெற்றனர்.
இலங்கை இராணுவ உடற்கட்டமைப்பு, பளு தூக்குதல் மற்றும் பவர் லிஃப்டிங் கமிட்டியின் மூன்று பளு தூக்கும் வீரர்கள், அதாவது 15 வது இலங்கை பீரங்கி படையணியின் பணிநிலை சார்ஜென்ட் ஏ.ஜி.எஸ் அபேவிக்ரம, கொமாண்டோ படையணியின் சார்ஜென்ட் ஜே.சி.லக்மால் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கோப்ரல் வை.டி.ஐ.குமார ஆகியோர் சிங்கப்பூர் சர்வதேச பாரம் தூக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் காமன்வெல்த் நாடுகளில் இருந்து சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இப்போட்டிகள் சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று வருகிறன.