18th February 2022 18:53:20 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் கீழுள்ள 643 வது பிரிகேடின் 13 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினரால் சேதன பசளைகளைக் கொண்டு இரண்டு ஏக்கர் வயல்களில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையானது என்னற்ற விளைச்சலை வழங்கியது.
புதன் (16) வழக்கமான ரன் அஸ்வானு நெலிமா (அறுவடை) பழங்கால சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு அமைவாக அந்த இடத்தில் அறுவடை நடைபெற்றது.
64 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி வீரகோன், 643 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிரால் டி சில்வா, 64 வது படைப் பிரிவின் கேணல் பதிவி நிலை அதிகாரி , 13 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி, முல்லைத்தீவில் உள்ள கமநல அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.