18th February 2022 18:56:02 Hours
அதிமேதகு ஜனாதிபதியின் 'கம சமக பிலிசந்தரக்' எனும் திட்டத்திற்கமைய ஹன்வெல்ல ராஜசிங்க மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினால் மாணவர் விடுதியின் புனரமைப்புப் பணிகள் சுபீட்சத்தின் நோக்கு தேசியக் கொள்கைக்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியினால் 15 வது (தொ) இலங்கை பொறியியலாளர் படையணியின் சிப்பாய்கள் 2021 ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டம் மூலம் முன்னெடுக்கப்பட்டது.
தலைமைக் களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர மற்றும் பொறியியலாளர் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பொதுப் பொறியியலாளர் படையணியின் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா அவர்களின் மேற்பார்வையில் திட்டமிட்டபடி பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின்படி இலங்கை இராணுவப் பொறியியலாளர் படையணியின் படையினர் தற்போது உள்கட்டமைப்பு, கைவிடப்பட்ட குளங்களை புனரமைத்தல் மற்றும் சுத்தப்படுத்தல், வீதிகளை சீர் செய்தல், திருத்துதல் போன்ற பல தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.