Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2022 18:30:32 Hours

கேணல் லங்கா பெர்னாண்டோ அவர்களின் குடும்பத்தாருக்கு இராணுவத் தளபதி இரங்கல்

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (12) பிற்பகல் கேணல் காணி மற்றும் வழங்கல் கேணல் லங்கா பெர்னாண்டோவின் பூதவுடலுக்கு அஞ்சலி கேகாலை மொலகொடவில் செலுத்தினார்.

இலங்கை பீரங்கி படையணியின் கேணல் லங்கா பெர்னாண்டோ ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை (9) காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12) பிற்பகல் கேகாலை மொலகொட மயானத்தில் இராணுவ மரியாதை மற்றும் தளபதி அஞ்சலிக்கு மத்தியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் உறவினர்களும் நெருங்கிய இராணுவ சகாக்களும் கலந்துகொண்டு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் துயரங்களை பகிர்ந்துகொண்டனர்.

மொலகொடவில் உள்ள கேணல் லங்கா பெர்னாண்டோவின் இல்லத்தில் இருந்து அணிவகுப்பு புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ஜெனரல் ஷவேந்திர சில்வா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கேணல் லங்கா பெர்னாண்டோவின் எதிர்பாராத மறைவையிட்டு, அவரது துணைவியாரான திருமதி லங்கா பெர்னாண்டோ அவரது பிள்ளைகள் மற்றும் துயரில் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.