04th February 2022 13:03:25 Hours
55 வது படைப்பிரிவு தலைமையகத்தைச் சேர்ந்த 120 இற்கும் மேற்பட்ட படையினர் யாழ். அய்யகச்சி 552 வது பிரிகேட் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு புதன்கிழமை (2) இரத்ததானம் வழங்கினர், நோயாளர்களின் தேவை கருதி யாழ் போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க படையினரால் இந்த இரத்தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின்படி 552 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ருவன் முனிபுர மற்றும் 55 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களுடன் படையினர் இணைந்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
கோவிட் 19 தொற்று நோய் பரவலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அந்த படையினர்களால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவிற்கு சிற்றுண்டிகள் உட்பட அனைத்து வசதிகளும் ஏட்பாடு செய்யப்பட்டது.