31st January 2022 20:51:52 Hours
அரசாங்கத்தின் 'தடுப்பூசி வாரத்திற்கு' இணங்க, சனிக்கிழமை (29) திகதி கிளிநொச்சி முதலாவது படையணியின் தலைமையக கட்டளையின் கீழ் உள்ள 58 வது படைப்பிரிவின் படையினர், 58 வது படைப்பிரிவு, 581 வது பிரிகேட் தலைமையகம், 582 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் 583 வது பிரிகேட் தலைமையகம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கான தடுப்பூசி திட்டத்திற்கான தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்கினர்.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன், நவகத்தேகம (58 வது படைப்பிரிவில்) நிறுவப்படட தடுப்பூசி நிலையத்தில் 841 பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதுடன் 581 வது பிரிகேட் தலைமையகம் அமைந்துள்ள கொட்டகலை பிரதேசத்தில் 137 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர். மேலும் 582 வது பிரிகேட் தலைமையகம் அமைந்துள்ள ஹொரண பிரதேசத்தில் 179 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்.வாதுவாவில் முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படையணி சிப்பாய்களால் 571 பேருக்கும், குருநாகலில் 583 வது பிரிகேட் சிப்பாய்கள் மூலம் 366 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
முதலாவது படையணியின் வழிகாட்டுதல் மற்றும் 58 வது படைப்பிரிவு தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதுடன் தடுப்பூசி திட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக நடமாடும் தடுப்பூசி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முனனெடுக்கப்பட்டது.