Header

Sri Lanka Army

Defender of the Nation

19th January 2022 21:04:40 Hours

52 மற்றும் 55 வது படைப் பிரிவினரின் தைப்பொங்கல் தின வழிபாடுகள்

செல்வச் சந்நிதி ஆலயத்தின் தைபொங்கள் தின சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளை 521 பிரிகேட் தலைமையகம் மற்றும் 11 வது விஜயபாகு காலாட் படையணியினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் 52 வது படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் சமந்த விக்கிரமசேன, 521 வது மற்றும் 523 வது பிரிகேடுகளின் தளபதிகள் பிரிகேடியர் மஹேன் சல்வத்துர, பிரிகேடியர் நிஸ்ஸங்க சமரதிவாகர, 521 வது பிரிகேட் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இந்நிகழ்விற்கு முன்னதாக கோவில் வளாகத்தில் சிரமதான பணிகளில் படையினர் ஈடுபட்டிருந்ததுடன் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பக்தர்களுக்கு படையினரால் 150 மதிய உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

அதேபோல், 551 வது பிரிகேட் படையினர் வல்லிபுரம் பகுதியில் உள்ள இந்து பக்தர்களுடன் இணைந்து 14 ஜனவரி 2022 வல்லிபுரம் ஆழ்வார் கோவிலில் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

மேற்படி, தைப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகளின் பிரதம அதிதியாக 55 வது படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன கலந்துகொண்டார். இந்த சமய நிகழ்வில் வல்லிபுரத்திலுள்ள 551 மற்றும் 553 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன அவர்கள் கோவில் வளாகத்தில் கோலம் வரைவதற்கு உறுதுணையாக இருந்த நபர்களுக்கு பரிசுகளை வழங்கி, பக்தர்களுக்கு பிரசாதங்களையும் வழங்கியமை சிறப்பம்சமாகும்.