19th January 2022 21:00:53 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 54 வது படைப்பிரிவு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 360 கிராம் (Crystal Meth Drugs) ஐஸ் போதைப்பொருள் தலை மன்னார் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 3.6 மில்லியன் ரூபாயென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதோடு, அவை மேலதிக விசாரணைகளுக்காக தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன வீரசேகர அவர்களின் அறிவுரைக்கமைய மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.