Header

Sri Lanka Army

Defender of the Nation

01st January 2022 01:00:39 Hours

அவசர நிலைமைகளில் முதலாம் படையணியினரின் அர்பணிப்புடன் கூடிய வகிபாகம் தொடர்பில் கிளிநொச்சியில் இராணுவ தளபதி நினைவூட்டல்

"இராணுவத்தின் 53 மற்றும் 58 வது படைப்பிரிவுகள், மற்றும் கொமாண்டோ படையணி, சிறப்புப் படைகள் மற்றும் இராணுவத்தின் எயார் மொபைல் பிரிகேட் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இராணுவத்தின் 'முன்நகர்வுக்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025' உடன் கைகோர்த்து முதலாம் படையணி உருவாக்கப்பட்டது. நடவடிக்கைக்கான படையினர் மற்றும் முதலாம் படையினர் எந்தவொரு இயற்கை அல்லது செயற்கையால் ஏற்படும் அவசரநிலை ஏற்பட்டால் அதற்கேற்ப தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஏற்கனவே உங்கள் திறன்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள் மிக அண்மைய அனர்த்தங்கள் மற்றும் வெள்ளம் மற்றும் எதிர்வரும் வருடத்திலும் உங்களது அர்ப்பணிப்புப் பணிகளைத் தக்கவைக்க வேண்டும்" என்று பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும், பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கிளிநெச்சியில் அமைந்துள்ள முதலாவது படையணியின் தலைமையகத்தின் படையினருக்கு புதன்கிழமை (29) உரையாற்றுகையில் தெரிவித்தார்.

முதலாவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் வருகைதந்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சாந்திபுரம் ஹெலிகப்டர் தரையிரங்கும் இடத்தில் அன்புடன் வரவேற்றார். மேலும் முதலாவது படையணியின் தலைமையக வளாகத்தின் நுழைவாயிலில் 3 வது கஜபா படையணியின் சிப்பாய்களினால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் போது உரையாற்றிய அவர், நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக முதலாம் படையணியின் தளபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், ஒரு தொழில்முறை இராணுவம் என்ற வகையில் தேசிய பாதுகாப்புக் பணிகளுக்காக அனைத்து அணிகளின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார். மேலும் எமது மண்ணில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஏனைய சமூகவிரோத செயற்பாடுகளை ஒழிப்பதற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார். "ஜனாதிபதியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வசதியற்ற பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பாடசாலை கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது மைதானங்கள், பொது இடங்கள், குளங்கள், மேம் பாலங்கள் போன்ற அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதும் சமாந்தர முக்கியமானது. அந்த தேசியப் பணிகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பின் அளவு எதிர்வரும் ஆண்டிலும் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன வழங்கிய ஆதரவையும் பாராட்ட வேண்டும் என "இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

அவர் தனது பதவிக்காலத்தில் இராணுவத்தில் உள்ள அனைத்து தரப்புகளுக்கும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை வழங்கியதாகவும் மேலும் வரும் புத்தாண்டில் இராணுவத்தின் அனைத்து நிலையினருக்கும் மேலும் பதவி உயர்வுகளை வழங்கவும் உறுதி செய்தார். "ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு எங்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புப் பணிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதில் உங்களின் அர்ப்பணிப்பு ஆகியவையும் பாராட்டப்பட வேண்டியவை. இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததற்காக யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் அனைத்து நிலையினருக்கும் நன்றி கூறினார். புதுவருடம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் நமது ஆயுதப்படை வீரர்களை தேசம் உயர்வாகக் கருதுவதால், நீங்கள் சிறந்த முறையில் கடமைகளைச் மேலும் முன்னெடுக்க முடியும் என்று நான் விரும்புகிறேன் என்றும் கூறினார். "

மேலும், தளபதி அவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு விசேட பயிற்சிகளைப் பெறுவதே சிறந்தது. இது முதலாம் படையணியின் ஒரே நோக்கமாகும் எனவும், இப்படையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் ஏனைய சிப்பாய்களும் மற்றவர்களை விட அதிக பொறுப்புகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். புத்தலவில் போர்க் கல்லூரி நிறுவப்பட்டமை, இலங்கை இராணுவத்திற்கு நன்கு தகுதியும் பயிற்சியும் பெற்ற அதிகாரிகளை வளர்ப்பதற்கு சிறந்த உதாரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தம் உயிர்களை தியாகம் செய்த முதலாம் படையணியைச் சேர்ந்த போர் வீரர்களை நினைவு கூர தளபதி அவர்கள் மறக்கவில்லை. முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பிரதேச தளபதி, கட்டளை அதிகாரிகள், படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.