23rd October 2021 14:25:16 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி 10 வது அக்டோபர் 2021 அன்று 72 வது இராணுவ தின விழாவை கொண்டாடும் முகமாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி பிரிகேடியர் நலிந்த நியங்கொட இராணுவ கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், இராணுவ கீதம் பாடப்பட்டதுடன் இறந்த வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ கல்வியற் கல்லூரியின் நிறைவேற்று நிர்வாக அதிகாரி மேஜர் RAA ரணவக்க அவர்களால் இலங்கை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் இராணுவத் தின செய்தி வாசிக்கப்பட்டது. இதில் பாரம்பரியம் மற்றும். பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களில் இலங்கை இராணுவத்தின் ஒழுக்கத்தின் வகிப்பங்கு பற்றி எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
சீனோ-லங்கா நட்பு அரங்கத்தில் அனைத்து படையினருக்கும் உரையாற்றிய இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி இராணுவத் தளபதியின் சிறப்பு அறிவுறுத்தல்கள் , ஒழுங்கு மற்றும் நடத்தையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தினார். அதனை தொடர்ந்து மாலையில் படையினருக்கு ஆசி வழங்குவதற்காக போதி பூஜை நிகழ்வு நடைபெற்றது.