18th October 2021 12:54:42 Hours
தற்பொழுது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடற்றவர்ளுக்கான வீட்டுத்திட்டத்தின் ஒருகட்டமாக, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழ் 11 வது (தொண்) இலங்கை இராணுவ சிங்க படையணியினால் பக்கியல்ல வெல்லவெலி பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற 8 வது விஜயபாகு படையணியின் சிப்பாய் ஒருவருக்கு புதிய வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் செவ்வாய் கிழமை (12) பிரதம விருந்தினராக குறித்த வீட்டின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டுக்கான சாவியை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நடைமுறை உளவியல் சிரேஷ்ட ஆலோசக பயிற்சியாளர் திரு சந்தன குணவர்தவினால் இந்த திட்டத்திற்கான நிதி உதவியளிக்கப்பட்டுள்ளது
23 வது பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மற்றும் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் துலிப பண்டார ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 11 வது (தொண்) சிங்கப் படைப்பிரிவினால் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு அவசியமான மனிதவளம், தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவம் வழங்கப்பட்டது.