Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2020 03:52:10 Hours

முதலாவது மகளிர் படையணியின் 41 ஆவது ஆண்டு நிறைவு விழா

இராணுவ மகளிர் படையணியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலுகள்ள மகளிர் படையணியின் பயிற்சி முகாமில் நீண்ட கால தேவையின் நிமித்தம் புதிதாக அமைக்கப்பட்ட சிற்றூண்டிச்சாலை மகளிர் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் ஜானக ரத்நாயக அவர்களது அழைப்பையேற்று மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களினால் இம் மாதம் 01 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

முதலாவது இராணுவ மகளிர் படையணியின் 41 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சிற்றூண்டிச்சாலை திறப்பு விழாவானது பயிற்சி முகாமில் முதலாம் திகதி இடம்பெற்றது.

அத்துடன் இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மகளிர் படையணியைச் சேர்ந்த படையினர்களுக்காகவும் ஆண்டு நிறைவை முன்னிட்டும் பெல்லன்விள ரஜ மஹா விகாரையில் ஆசிர்வாத சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. அத்துடன் தலைமையக மைதானத்தில் முதலாவது மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி டி.சி.என் போம்புவள அவர்களுக்கு இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் கட்டளை அதிகாரியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளும் மேற்கொள்ளப்பட்டன. Running sport media | Ανδρικά Nike