25th July 2020 17:12:01 Hours
திருக்கோணமலை 22 வது கலாட் படைப்பிரிவு 1997 ஜூலை மாதம் 23 ஆம் திகதி நிறுவப்பட்டது, இதன் 23 ஆண்டு நிறைவை முன்னிட்டு 23 ஆம் திகதி வியாழக்கிமை 22 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிக்காட்டலின் பிரகாரம் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம் புதன்கிழமை 22 ஆம் திகதி திருகோணமலை ரேவதா அனாதை இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டதுடன் 23 ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை ஜெயசுமனராமய மகா சங்க தேர்ர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 22 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினர் சிலர் கலந்துகொண்டனர். Sports Shoes | Nike Air Max 270