Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2020 17:10:34 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இவருக்கு 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ கௌரவ மரியாதைகள் இம் மாதம் (15) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் அழைப்பில் பிரகாரம் வருகை தந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதிக்கு 24 ஆவது சிஙகப் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு இவர் 59 ஆவது படைப் பிரிவிற்கு வரவேற்கப்பட்டார். பின்னர் படைத் தளபதி அவர்களினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தான் சேவையாற்றிய காலத்தினுள் ஒத்துழைப்பை வழங்கிய படையினருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov