Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2020 18:04:54 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் சிங்கப் படையணியைச் சேர்ந்த உயரதிகாரிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவ நித்திய படையணியில் 35 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் சிங்கப் படையணியைச் சேர்ந்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களுக்கு இம் மாதம் (19) ஆம் திகதி சிங்கப் படையணி தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரியை சிங்கப் படையணியின் பிரதி மத்திய கட்டளை தளபதி கேர்ணல் துலீப் பெரேரா அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வைக்கப்பட்டன. பின்னர் தலைமையக பணிமனைக்கு வருகை தந்த இந்த மூத்த அதிகாரியை சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக அவர்களால் வரவேற்கப்பட்டார்.

பின்னர் இந்த உயரதிகாரி தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலிகளை செலுத்தினார். அத்துடன் தலைமையக ஆணைச்சீட்டு உத்தியோகத்தரினால் சாஜன் விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பலிலும் இணைந்து கொண்டு படையினருடன் உரையாடல்களையும் மேற்கொண்டார்.

அன்றைய தினம் இரவு தலைமையக அதிகாரி விடுதியில் இந்த உயரதிகாரிக்கு பிரியாவிடை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அச்சமயத்தில் சிங்கப் படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இவரது பாரிய சேவையை பாராட்டி நினைவுச் சின்னமொன்றையும் பரிசாக வழங்கி வைத்து கௌரவித்தார்.

இந்த இரவு விருந்தோம்பல் பிரியாவிடை நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள், அவர்களது மனைவிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy shoes | Marki