22nd July 2020 20:57:55 Hours
இலங்கை இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் அனில் உதய குமார அவர்கள் இராணுவ தலைமையகத்தின் ஆளனி நிருவாக பணியகத்தின் புதிய பணிப்பாளராக இன்று (22) ஆம் திகதி தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
இவரது பணிமனையில் சமய அனுஷ்டான ஆசிர்வாத வழிபாடுகளின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பு பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சிசிர பிலபிடிய அவர்கள் 55 ஆவது படைப் பிரிவிற்கு இடமாற்றம் பெற்று செல்வதன் நிமித்தம் இந்த புதிய பணிப்பாளர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணியகத்தைச் சேர்ந்த படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | Nike Shoes