21st July 2020 21:56:02 Hours
புகழ்பெற்ற நன்கொடையாளரான திரு குமார வீரசூரிய அவர்களால் யாழ்ப்பாண கரவெட்டி பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திருமதி கணேசமூர்த்தி நிலஞ்ஜினி அவர்களுக்கு புதிய வீடொன்றும், உபகரணங்களும் இம் மாதம் (20) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் யாழ் குடா நாட்டில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நலன்புரி வீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
கரவெட்டி பகுதியில் புதிதாய் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய வீடு 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களின் தலைமையில் 4 ஆவது சிங்கப் படையணியின் பூரன பங்களிப்புடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக்கப்பட்டது.
இந்த வீடு கையளிப்பு நிகழ்வில் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, கரவெட்டி பிரதேச செயலாளர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
அத்துடன் நன்கொடையாளரின் உதவியுடன் யாழ் அல்வாய் பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திருமதி கனிஷ்டியா சுதாகர் பெண்மணி ஒருவருக்கு இராணுவத்தினரது உதவியுடன் புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் இம் மாதம் (20) ஆம் திகதி நாட்டி வைக்கப்பட்டன.
55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களின் மேற்பார்வையில் 4 ஆவது சிங்கப் படையணியினால் முழுமையான பங்களிப்புடன் இந்த வீட்டு நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Adidas footwear | Air Jordan Release Dates 2020