18th July 2020 21:23:07 Hours
யாழ் முருசுவில் பகுதியில் அமைந்துள்ள 52 ஆவது படைப் பிரிவின் தலைமை வளாகத்தினுள் கூடைப்பந்தாட்ட கூடமானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.எஸ் வடுகே அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (17) ஆம் திகதி வருகை தந்து ரிபன்களை வெட்டி திறந்து வைத்தார்.
இந்த படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை நுழைவாயிலில் வைத்து 15 (தொ) கஜபா படையணியினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
அன்றைய தினம் இந்த கூடைப்பந்தாட்ட கூடத்தில் இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு இடையில் போட்டிகள் 45 நிமிடங்கள் இராணுவ தளபதியின் பார்வை முன்னிலையில் இடம்பெற்றன. பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் போட்டியில் வெற்றீயீட்டிய போர் வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் இராணுவ தளபதி அவர்கள் இந்த வினையாட்டு கூடாரத்திற்கருகாமையிலுள்ள படையினருடன் உரையாடல்களையும் மேற்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, படைத் தளபதிகள். பிரிகேடியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!