02nd July 2020 16:33:30 Hours
இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘துரு மிதுரு நவ ரடக்’ எனும் தொணிப் பொருளின் கீழ் உள்நாட்டு மூலிகை மரநடுகையானது அம்பேபுஸ்ஸவிலுள்ள இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டன.
உள்நாட்டிலுள்ள பெறுமதி வாய்ந்த மருந்து மூலிகைக் கன்றுகளான வேம்பு, பேல் பழம் , மீ , கும்புக’ கலுவரா போன்ற 450 மரக்கன்றுகள் இந்த மரநடுகை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
மூத்த ஆயுர்வேத மருத்துவர்கள், பிலியண்டலாவில் உள்ள சுவேசேதா ஹெலா ஒசு ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் மெஸ்ஸர்கள் சம்பத் இந்திக, திரு கே.டி.சி.எஸ். குமரதுங்க, ஆயுர்வேத திணைக்கள ஆணையளார், சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு, ஜினசேனா குழுமத்தின் உரிமையாளர் டொக்டர் திஸ்ஸ ஜினசேனா, ஜினசேனா எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஜினசேனா வேளாண் இயந்திரங்கள் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஜினசேனா பொறியியல் தொழில்நுட்பங்கள் (பிரைவேட் லிமிடெட்) ) அந்த மூலிகை இனங்களை பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்ட லிமிடெட் இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தது.
இலங்கை சிங்கப் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவரான திருமதி இந்து செனவிரத்ன மற்றும் சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக்க ஆகியோருக்கு முதல் சந்தன மரக்கன்றுகள் திரு சம்பத் இந்திக அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர், படையினரினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் நட ஆரம்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் சிங்கப் படையணி சேவா வனிதா பிரிவின் செயலாளர் திருமதி ரோஹினி திசாநாயக, இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov