Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2020 17:32:34 Hours

படையினரால் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 221 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் கீழ் உள்ள 6 ஆவது விஜயபாகு காலாட்படை படையணி மற்றும் 2 ஆவது (தொ) கஜபா படையணியின் படையினர் 25 ஆம் திகதி வியாழக்கிழமை திரியாய பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த திட்டமானது கும்புருப்பிட்டி தமிழ் கலவன் பாடசாலை, விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் சிங்கள மகா வித்யாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடற்படை, பொலிஸ் , சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் படையினருடன் இணைந்து கொண்டனர்.

பருவமழை பெய்ததன் பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதல்களில் படையினர் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Authentic Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov