27th June 2020 17:55:27 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 2 அவது இலங்கை சிங்க படையணி மற்றும் 10 ஆவது சிங்க படையணியின் படையினர் கண்டி மாவட்டத்தில் உள்ள மஹய்யாவை,கினிகத்ஹென மற்றும் மஹகந்த ஆகிய பிரதேசங்களில் வெவ்வேறாக விஷேட டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்வினை ஜூன் 25 ஆம் திகதி நடாத்தினர்.
பொலிஸ்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய தொண்டர்கள் ஆகியோருடன் இணைந்து படையினர் நுளம்பு பெருகும் இடங்களை தேடி அவ்விடங்களை துப்பரவு செய்தனர்.
11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜாலிய சேனாரத்ன மற்றும் பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீரத்தி கொஸ்டா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இவ்வேளைத்திட்டம் இடம்பெற்றது. Running sneakers | Nike Shoes, Clothing & Accessories