27th June 2020 17:30:27 Hours
முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையத்தின் (28) ஆம் திகதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ருவல கல்பிட்டிய தனிமைப்படுத்தப்படுத்தல் மையம்- (05) மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தப்படுத்தல் மையம் (01) ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் 06 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் சுகாதார சான்றிதழ்களுடன் இன்று இன்று (28) தங்கள் வீடுகளுக்கு புறப்படுவார்கள்.
இன்று (28) ஆம் திகதி வரையான காலப் பகுதியில் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 16,978 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் முப்படையினரால் நிர்வாகித்து வரும் 48 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,153 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இன்று காலை (மு.ப. 6.00) வரையான காலப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து இலங்கையை வந்தடைந்தவர்களில் 19 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளன. மேலும் 20 நபர்களில், 10 வெளிநாட்டை சேர்ந்த இலங்கையர்கள் மற்றும் 10 கடற்படையினர் பூரன குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று இன்றைய (28) ஆம் திகதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. latest jordan Sneakers | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov