18th June 2020 21:30:27 Hours
நாடுபூராக இடம்பெறும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் ஜூன் 18 ஆம் திகதி வியாழக்கிழமையன்று வெள்ளங்குளம் பொதுச் சந்தையில் டெங்கு கட்டுப்பாட்டு துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்களை டெங்கில் இருந்து பாதுகாப்பதற்காக, 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெமந்த பண்டார அவர்களின் வழிகாட்டல் மற்றும் 651 ஆவது பிரிகேட் படைத் தலைமைய தளபதியவர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்வானது நடாத்தப்பட்டது.
19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இந்த நிகழ்விற்கு தங்களது பங்களிப்பினை வழங்கினர். Asics shoes | Nike