Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2020 21:54:46 Hours

புதிதாக பதவியுயர்தப்பட்ட மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க அவர்களுக்கு தளபதி பாராட்டு தெரிவிப்பு

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கஜபா படையணியின் மற்றும் விஷேட படையணியணியின் படைத் தளபதி ஆவார். இவர், புதிதாக பதவியுயர்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க அவர்களுக்கு இம் மாதம் 16 ஆம் திகதி ஜயவர்தனபுர்த்திலுள்ள இராணுவத் தலைமையகத்தில் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவியுயர்வு இலாஞ்சனைகளை அவருடைய சீருடையில் சூட்டினார்.

இராணுவ தளபதி அவர்கள் புதிதாய் பதவியுயர்த்தப்பட்ட உயரதிகாரிக்கு புதிய பதவியை வழங்கி வாழத்துக்களை தெரிவித்து நாட்டிற்கு சேவையாற்றிய மூத்த அதிகாரியான இவரது தந்தையையும் நினைவு படுத்தி அவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதியவர்களினால் புதிதாய் பதவியுயர்த்தப்பட்ட மூத்த அதிகாரிக்கு மேஜர் ஜெனரல் பதவி உயர்த்துவதன் முக்கியதுவம் நிர்வாகத்தின் சிறப்பான விடயங்கள் தொடர்பாக விளக்கி சுட்டிக்காட்டினார்.

மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க அவர்கள் இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த அதிகாரியாவார். இவரது தந்தையார் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவ தளபதியான ஜெனரல் ஹமில்டன் வனசிங்க ஆவார். இவர் இராணுவத்தில் (1988 – 1991) ஆம் ஆண்டு வரை இராணுவ தளபதியாக கடமை வகித்தார். இவர் 4 நட்சத்திர ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டார்.

இந்த மூத்த அதிகாரி இராணுவ வெளிநாட்டு பணியகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு 59 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் பதவிநிலை அதிகாரியாகவும், 682, 144 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியாக பதவி வகித்தார். அத்துடன் ஈழபோர் iV, இராணுவ ஸ்னயிபர் பயிற்சி கல்லூரியின் கட்டளை அதிகாரியாக கடமை வகித்துள்ளார்.

இராணுவ தளபதியின் பரிந்துரைப்பின் கீழ் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் பிரிகேடியர் சஞ்ஜய வனசிங்க மற்றும் பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா அவர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு ஜீன் மாதம் 2 ஆம் திகதி பதவியுயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | jordan Release Dates