16th June 2020 22:33:24 Hours
கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக இலங்கை பாதுகாப்பு படையினர்கள் ஆற்றிய சேவையை கௌரவித்து அவர்களுக்கு அக்கறையாக இலங்கை இராணுவ கணக்காளர் சங்கம் இன்று பிற்பகல் 4 மணிக்கு கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு 2 மில்லியன் பெறுமதிமிக்க பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடையாக இம் மாதம் (16) ஆம் திகதி வழங்கி வைத்தனர்.
இந்த சங்க ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை இந்த நிதியத்திற்காக வழங்கி வைத்து 1800 உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை கோவிட் மைய தலைவருக்கு வழங்கி வைத்தனர். பின்னர் இந்த சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இராணுவ தளபதி கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பதற்கு இலங்கை பாதுகாப்பு படையினரது பாரிய சேவையை கௌரவித்து இச்சங்கமானது பாதுகாப்பு படையினர்களுக்கு இந்த நலன்புரி வசதிகளை மேற்கொண்டுள்ளதுடன் இலங்கை இராணுவத்தின் நிதி பணியகத்தின் பணிப்பாளர் திரு கே.டி.என் கருணாதிலக அவர்களின் ஊடாக இந்த நிதி நிதியுதவியானது இராணுவ தளபதியிடம் கையளிக்கப்பட்டன. இதன் போது இராணுவ தளபதியவர்கள் நன்றிகளை தெரிவித்தார். .
இந்த சந்திப்பின் போது இராணுவ தளபதியுடன் இராணுவ நிதி பணியகத்தின் பணிப்பாளர் திரு கே.டி.என் கருணாதிலக, கணக்காளர் சங்கத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் திரு எல்.பி சித்ரஞ்சன், தலைமை தணிக்கையாளர் எஸ்.டி புளத்சிங்கள, செயல்பாட்டு துறையின் கணக்காளர் திரு. ஜி.எம்.எல் சந்திமா மற்றும் தணிக்கை பணிப்பாளர் திரு எம்.ஆர்.ஜி.ஏ.பி முத்துகுடே போன்றோர் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | 『アディダス』に分類された記事一覧