Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2020 10:42:43 Hours

தியகம மற்றும் ஹிரகம தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த நபர்கள் இராணுவத்தினருக்கு வாழ்த்துக்கள்

கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இலங்கையில் 45 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் இராணுவத்தினரால் பராமரித்து வரப்படுகின்றன.

இம் மாதம் (12) ஆம் திகதி வெள்ளிக் கிழமை தியகம தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 113 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன் இம் மாதம் (13) ஆம் திகதி சனிக்கிழமை ஹிரகம தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த (45) பேர் தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Sportswear Design | Nike for Men