Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2020 15:15:03 Hours

பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து படையினரால் 'டெங்கு' விழிப்புணர்வு நிகழ்வு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 'டெங்கு' தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால்,மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் இயங்கும் 111 ஆவது பிரிகேட் மற்றும் 112 ஆவது பிரிகேட் படையினர் கட்டுகேலி, கிரிபத்கும்புர, அகஸ்துஸ்வத்தை, ரஜவெல்ல, நியங்கண்டோரா மற்றும் டிக் ஓயா ஆகிய பகுதிகளில் 'டெங்கு' பரவுவது குறித்த விழிப்புணர்வு திட்டங்களை பொது சுகாதார பரிசேதகர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் வெள்ளிக்கிழமை 12 ஆம் திகதி நடத்தினர்.

அந்த பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 'டெங்கு' அச்சுறுத்தல் மற்றும் கொசுக்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்டா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

111 ஆவது மற்றும் 112 ஆவது பிரிகேட் படையை சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் 51 ஏனைய படையினர் திறமையாக குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களுக்கு பங்களிப்பு செய்தனர். Running sport media | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ