02nd June 2020 17:58:13 Hours
சிறப்புப் படையின் பிரிகேடியர் டிஜிஎஸ் சேனாரத் யபா திங்கட்கிழமை (01) கிள்நொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 14 வது தளபதியாக ஆக பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி தலைமையகத்திற்கு வந்த போது நுழைவாயிலில் பாதுகாப்பு அணிநடை மரியாதையினை 07வது இலங்கை இலேசாயுதப் படையினால் வழங்கப்பட்டது.
மத அனுஸ்டானங்கள் மற்றும் பிரித் ஓதலுக்கு மத்தியில் அதிகாரப் பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பிரிகேடியர் சேனாரத் யபா பதவியேற்றார்.
பின்னர், 57 வது படைப்பிரிவு தலைமையகத்தில் கடமையாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினருக்கு 57 வது படைப்பிரிவு பலநோக்கு கட்டடத்தில் கட்டளைக்கு உட்பட்ட பிரிகேட் மற்றும் படையணிகளின் படையினருக்கு உரையாற்றினார், மேலும் 57 படைப்பிரிவின் தனது எதிர்கால திட்டத்தை அறிவித்தார்.
இந் நிகழ்வில் அனைத்து படைத் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Sportswear Design | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News