19th May 2020 13:53:52 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானியும் , இராணுவ தளபதியும், கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பியல் டீ சில்வா மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்சல் சுமங்கல டயஸ் ஆகியோர் (18) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இடம் பெற்ற தேசிய போர் வீரர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்சியில் கலந்துகொண்டனர்.
முப்படை தளபதிகள் நாட்டின் நிலையான சமாதானத்திற்காக எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் வெற்றியின் போர்க்கள அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். இங்கே முழுமையான வீடியோவை காணலாம் Buy Sneakers | Men's Footwear