11th May 2020 08:20:00 Hours
தனியார் நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 2400 கிலோ அடங்கிய புதிய காய்கறிகளை கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவைபுரியும் படையினர் பொதுமக்களுக்கு விணியோகிப்பதற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.
தொற்று நோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பொன்னகர், விசுவமடு மேற்கு மற்றும் கல்லாரு ஆகிய பொதுப் பிரதேசங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைத் சேர்ந்த பொதுமக்களுக்கு அதிகளவிளான காய்கறி பொதிகள் வியாழக்கிழமை (07) ஆம் திகதி விநியோகிக்கப்பட்டன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் , நன்கொடையாளரான அமெரிக்காவைச் சேர்ந்த திரு. சேனக சேனவிரத்ன அவர்களால் அனுசரணை வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் மேற் பார்வையின் கீழ் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது,9 ஆவது விஜயபாகு காபலாட் படையணி, 1 ஆவது சிங்க படையணி மற்றும் 14 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையிணியின் படையினர் உன்னதமான வெசாக் தினத்தை முன்னிட்டு இந்நத நிகழ்வில் இணைந்து கொண்டனர். மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய Best Authentic Sneakers | adidas Yeezy Boost 350