09th May 2020 08:45:38 Hours
தொன்டமானாரு,கெருடாவில், வெல்வெட்டித்துரை, அவரங்காள்,நவலியட்டல்,கெட்பேலி. மிருசுவில், பவசிக்குளம்,கைதடி, சாவகச்சேரி, கட்டகாடு, மல்லாகம், வெத்தலைகேணி, கேவில், வல்லை, இனுவில், வட்டுக்கோட்டை, நவந்துரை, சவல்கட்டு, உடுவில், மற்றும் கைட், ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 750 க்கும் அதிகமான ஏழை குடும்பங்களுக்கு பனாகொடை தலைமையிடமாகக் கொண்ட இராணுவ பௌத்த சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ் படையினர் வெசக் தினமான (7) ஆம் திகதி உலர் உணவு பொதிகளை நன்கொடையாக பகிர்ந்தளித்தனர்.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் வழிக்காட்டலின் கீழ் யாழ் குடாநாட்டில் வசிக்கும் மேற்கூறிப்பிட்ட கிராமங்களில் வாழும் குடுப்பங்களுக்கு யாழ் படையினரால் உலர் உணவு பொதிகள் மற்றும் சமைத்த மதிய உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு யாழ் படையினர் வெசக் அலங்காரங்களுக்காக செலவழிக்கும் பணத்தை மீதப்படுத்தி இந்த நன்கொடைகளை வழங்கினர்.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 51,52, மற்றும் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையங்களின் படைத் தளபதிகள், பிரிகேட் கட்டளை தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். latest Nike release | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf